உடனே புறப்படு !
உடனே புறப்படு !
வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012
புதன், 15 ஆகஸ்ட், 2012
ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012
செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012
ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012
சனி, 7 ஜூலை, 2012
திங்கள், 2 ஜூலை, 2012
வியாழன், 17 செப்டம்பர், 2009
காரணம்
தற்கொலைக்கு முயன்ற ,
என்னைக் காரணம் கேட்டபோது ,
பதில் , தெளிவாய்ச் சொல்லிவிட்டேன்
ஒரு வேளை, என்னிடம்
வாழ்வதற்கான காரணம்
கேட்டு இருந்தால் ,
நான் வசமாய் மாட்டி இருப்பேன் !
சனி, 12 செப்டம்பர், 2009
அறிவுள்ள சோம்பேறி
பாபு வீட்டைவிட்டுக் கிளம்ப செருப்பைக் காலில் அணிந்த நேரத்தில் இருந்தே வீட்டை மறந்து விடுவான் . எந்தக் காரியத்திற்காகச் செல்கிறானோ அந்த விஷயம் மட்டுமே அவன் மனதை முழுதுமாக ஆக்கிரமித்து இருக்கும் . அதே சிந்தனையில் அவன் பேருந்து நிறுத்தத்தைச் சென்று அடைந்தான் .அந்த காலை நேரத்தில்தான் எவ்வளவு பரபரப்பாக மக்கள் ஓடுகிறார்கள் . எல்லோரும் ஏதோ பதைபதைப்புடனும் , எதையோ விட்டு விடக் கூடாது என்றும், தனக்கு பின் பக்கம் வேகமாக வரும் "ஆம்புலன்ஸ்'க்குக் கூட வழி விடத் தோன்றாமல் செல்லும் , மனிதநேயம் முற்றிலும் மறந்த இவர்கள் வாழ்வில் பிறருக்கு என்னதான் உதவி செய்வார்களோ ? என்று பாபுவின் சிந்தனை ஓட ஆரம்பித்தபோது அதைத் தடை செய்வது போல அவன் மிக அருகில் ஒரு பிட்சைக்காரன் "தர்மம்" கேட்டு நின்றான். அவன் குளித்து மாதங்கள் ஆகி இருக்கும் . பாபு அருவருப்புடன் , சற்று நகர்ந்தான் . பாபுவின் மிக அருகில் ஒரு டிப் -டாப் ஆசாமி ஒருவன் , சார் , பிச்சைக்காரர்கள் தொல்லை பெருந்தொல்லையாகப் போச்சு சார் , ஒரு ஆளிடம் ஒரு ரூபாய் வாங்கினாலும் எப்படியும் இவன் ஒரு நாளைக்கு நூறு ரூபாய் சம்பாதித்து விடுவான் சார் . இவன் மாதிரி ஆட்களை நாம் என்கரேஜ் செய்யக் கூடாது சார் . நம்ம நாட்டின் இமேஜ் இந்த மாதிரி பிட்சைக்கார பயகலால்தான் வீணாகப் போகுது சார் ,என்று ஒரு குட்டி பிரசங்கம் செய்து விட்டார் . அமைதியாக , அவரை முறைத்த பிட்சைக்காரன் , பாபுவிடம் , சார் நான் கேட்க்கிறேன் , நீங்கள் முடிந்தாக் கொடுங்க , இல்லைனா விடுங்க சார். இதனால் உங்களுக்கு ஒன்றும் பாதிப்பு இல்லை. ஆனா , இந்த ஆளு டிப்-டாப் ஆக உடை அணிந்து இருந்தாலும் , இவர் வாயில் வைத்து சிகரட்டை ஊதிக்கொண்டே உங்களுக்கு மிக அருகில் நின்று , உங்களுக்கும் , பக்கத்தில் உள்ள எல்லோருக்கும் புகை மூலம் நோயைப் பரப்புகிறார் என்று கூறி , பாபுவை ஆச்சரியத்தில் ஆழ்த்தினான் .பணம் படைத்த முட்டாள்கள் உள்ள உலகில் , அறிவுள்ள பிட்சைக்காரன் இருப்பதும் சரிதான் என்றும் , ஒரு வேளை இந்த பிட்சைக்காரன் அறிவுள்ள சோம்பேறியாக இருப்பான் என்று தன்னைச் சமாதானம் செய்துகொண்டு , அந்த டிப்-டாப் ஆசாமி பக்கம் பாபு திரும்பினான் . அங்கே அவன் விட்டுச் சென்ற அணைக்காத சிகரட்டு மட்டும் புகைந்து கொண்டு இருந்தது,
வெள்ளி, 11 செப்டம்பர், 2009
வியாழன், 10 செப்டம்பர், 2009
நிலைமை
அலுவலகப் பலகையின்
தூசி தட்டிப் பார்த்த பின்தான்
தெரிந்தது , அது ,
மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் என்று !
புதன், 9 செப்டம்பர், 2009
வால் ஆட்டினாலும் ........
நான் படித்தது என்னவோ பாரதியார் பாடம் சொல்லிக்கொடுத்தப் பள்ளிக்கூடத்தில்தான் , ஆனால் என்ன அவர் பாடம் சொல்லிக்கொடுத்தக் காலத்தில் நான் பிறக்கவே இல்லை . பாரதியாரின் மார்பளவு சிலை எங்கள் பள்ளி நுழைவு வாசலில் உண்டு . அந்த ஊரை விட்டு வந்து வருடம் பல ஆனாலும் , டவுன் பஸ்சில் பள்ளிக்கூடத்தை நான் எப்போது கடந்து சென்றாலும் ,அப்போது பாரதியாரின் சிலையை எட்டிப்பார்க்கத் தவறுவதே இல்லை . அப்போது என்னில் சில நினைவுகளும் எட்டிப்பார்க்கும் .
அப்போது எல்லாம், தமிழ் வாத்தியார் வேட்டி தான் கட்டி இருப்பார் . ஆங்கிலம் சொல்லித்தரும் வாத்தியார் பெரும்பாலும் இன் செய்து பேன்ட் அணிந்து இருப்பார் .
அன்று ஆங்கில வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டு இருந்த போது , ஒரு சக மாணவன் பாடத்தைக் கண்டு கொள்ளாமல் தனது கால்களை ஆட்டிக்கொண்டு இருந்தான். அதைப்பார்த்த ஆசிரியர் பாடத்தை நிறுத்திவிட்டு அவனை எழுந்து நிற்கும்படி சொன்னார்.
பின்பு , எவன் ஒருவன் கால்களை ஆட்டுகிறானோ , அவன் கீழ் தரமான எண்ணங்கள் மிகுந்த ஒருவனாக இருப்பான் என்றும் , பெண் ஆசை மிகுந்த ஒருவனாக இருப்பான் என்றும் , அவன் வாழ்கையில் முன்னுக்கு வர இயலாது என்றும் , அவன் மீது பெரியவர்களுக்கு நல்ல எண்ணம் வரும் வாய்ப்பு இல்லை என்றும் , தன்னுடையக் கருத்தை ஆணித்தரமாய் வகுப்பில் சொல்லிக்கொண்டு இருந்தபோதே அந்த வகுப்பு முடிந்த அடையாளமாய் மணி
ஒலித்தது .
அடுத்து , உள்ளே வந்த தமிழ் வாத்தியார் இருக்கையில் அமர்ந்தவாறு ,
ஆடிக் குடத்தடையும் ஆடும் போதே இரையும் ....என்ற பாடலைச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார் , தனது கால்களை வேகமாக
ஆட்டிக்கொண்டே .............?
அப்போது எல்லாம், தமிழ் வாத்தியார் வேட்டி தான் கட்டி இருப்பார் . ஆங்கிலம் சொல்லித்தரும் வாத்தியார் பெரும்பாலும் இன் செய்து பேன்ட் அணிந்து இருப்பார் .
அன்று ஆங்கில வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டு இருந்த போது , ஒரு சக மாணவன் பாடத்தைக் கண்டு கொள்ளாமல் தனது கால்களை ஆட்டிக்கொண்டு இருந்தான். அதைப்பார்த்த ஆசிரியர் பாடத்தை நிறுத்திவிட்டு அவனை எழுந்து நிற்கும்படி சொன்னார்.
பின்பு , எவன் ஒருவன் கால்களை ஆட்டுகிறானோ , அவன் கீழ் தரமான எண்ணங்கள் மிகுந்த ஒருவனாக இருப்பான் என்றும் , பெண் ஆசை மிகுந்த ஒருவனாக இருப்பான் என்றும் , அவன் வாழ்கையில் முன்னுக்கு வர இயலாது என்றும் , அவன் மீது பெரியவர்களுக்கு நல்ல எண்ணம் வரும் வாய்ப்பு இல்லை என்றும் , தன்னுடையக் கருத்தை ஆணித்தரமாய் வகுப்பில் சொல்லிக்கொண்டு இருந்தபோதே அந்த வகுப்பு முடிந்த அடையாளமாய் மணி
ஒலித்தது .
அடுத்து , உள்ளே வந்த தமிழ் வாத்தியார் இருக்கையில் அமர்ந்தவாறு ,
ஆடிக் குடத்தடையும் ஆடும் போதே இரையும் ....என்ற பாடலைச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார் , தனது கால்களை வேகமாக
ஆட்டிக்கொண்டே .............?
வியாழன், 3 செப்டம்பர், 2009
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)











